தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை: மதுரை மண்டல மின் வாரியம்

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.

மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பலரும் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாலும் இருப்பினும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதற்காக  வருகிற டிச.7 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மண்டல மின்வாரிய சுற்றறிக்கையில் உத்தரவு வெளியாகியிருக்கிறது.

மேலும் ,  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மண்டல மின்வாரியத்தில் 5,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com