தமிழகத்தில் புதிதாக 719 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,01,009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 719 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,31,235 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
மேலும், 737 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,86,683 பேர் குணமடைந்துள்ளனர்.
10 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 36,539 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 8,013 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவாகவே பாதிப்புகள் பதிவாகியுள்ளன.