மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் வந்த வந்த இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா - 10, கர்நாடகா - 2, ராஜஸ்தான் - 9, டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.