மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தமிழகத்தில் இன்று மேலும் 674 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 1:49 pm

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 5.54 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 35,389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கும், கோவையில் 102 பேருக்கும், ஈரோட்டில் 51 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 708 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 91,054-ஆக அதிகரித்துள்ளது.

 மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 7,723 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 13 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,612-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.