மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். 

News image
Updated On :12 டிசம்பர் 2021, 1:19 pm

DIN

சென்னை, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். 

பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தந்தனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.

இந்த சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகளான கல்யாணராமன், யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டது குறித்து ஆளுநரிடம் பேசியதாக பாஜக தகவல் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின் பாஜக மாநில பொதுச்செயலர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை.

பாஜகவின் நிர்வாகிகள் மீது திமுக வழக்குப்பதிவு செய்துள்ளது. திட்டமிட்டே திமுக அரசு இந்த வழக்கினை பதிவு செய்து வருகிறது என்றார்.  இதற்கிடையே கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தமிழக அரசு போடும் வழக்குகளை எதிர்த்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவர் கே.நிர்மல் குமார் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.