காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்னனு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஸ்ரீபெரும்புதூர், வடக்குப்பட்டு, வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம், பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.