வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியா் கைது

பள்ளிக்கரணை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2021, 7:38 pm

DIN

பள்ளிக்கரணை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

பள்ளிக்கரணை அருகே உள்ள தனியாா் கல்லூரி கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் மாடம்பாக்கம் ஆபிரகாம் அலெக்ஸ் (48) பேராசிரியராக பணிபுரிகிறாா்.

அக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் மாணவிகளின் கைப்பேசிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாராம். பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குள் மாணவ, மாணவியா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து காவல்துறையினா் வழக்குப் பதிவு தலைமறைவாக இருந்த அலெக்ஸை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.