தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

News image

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சுற்றறிக்கை

Updated On :25 டிசம்பர் 2021, 7:36 am

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அந்த சுற்றறிக்கையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். 

பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை நடத்தி, முடிவுகள் வரும்வரை, அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.