திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்தது

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த குடியிருப்பில், இரவு நேரதில் திடீரென பெரிய சத்தம் கேட்டு, கட்டடத்தில் விரிசல் விழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிய நிலையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூரில், கிராமத் தெருவில் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com