வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் மரணம்

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News image

வரட்டனப்பள்ளியில் எருது விடும் விழா

Updated On :4 பிப்ரவரி 2021, 5:09 am

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களையும், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எருதுகளும் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை மிகக் குறைந்த வினாடியில் கடக்கும் எருது சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு பரிசு வழங்குவர்.

Story image

இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி மாவட்டம் அல்லாமல் ஆந்திரம், கர்நாடகம், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியை பார்வையிட்டனர். இந்த எருது விழாவின்போது எருதுடன் கட்டப்பட்ட கயிறு காலில் சிக்கியது.

Story image

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜய நகரத்தை சேர்ந்த பத்மநாபன்(41), என்பவர் காயம் அடைந்தார். அவரை பெங்களுரூவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.