தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை தீயணைப்புத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெல்லை தீயணைப்புத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

Updated On :4 பிப்ரவரி 2021, 7:47 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ் தலைமை வகித்தார். இதில், சாலையில் செல்லும் வாகனங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில், வட்டார போக்குவரத்து அலுவலர், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.