ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.