மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாஜக நிர்வாகி கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :11 பிப்ரவரி 2021, 4:22 pm

DIN

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

இவர் மீது ஏற்கெனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, பிரிவினையை உண்டாக்கும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவரது செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இவரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் பரிந்துரைத்திருந்தார். இதன்பேரில் பாஜக நிர்வாக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல், ஈரோடு சிறையில் உள்ள கல்யாணராமனிடம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.