நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்

மயிலாடுதுறையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு தினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார். 

News image

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் பாஜகவினர்.

Updated On :11 பிப்ரவரி 2021, 9:30 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு தினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார். 

பாஜக மயிலாடுதுறை நகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பண்டிட் தீனதயாள் உபாத்யாயவுக்கு புகழஞ்சலி செலுத்தி, அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதில், மாவட்ட துணைத் தலைவர் முட்டம் செந்தில்குமார், பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் அய்யா.சுரேசு, மாவட்ட தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சதீஷ்பாபு, இளைஞரணி நகரச் செயலாளர் ராஜகோபால், சிறுபான்மை பிரிவு நகரத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.