தொழில் தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கோரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு இணையதளத்தில், நிறுவனத்துக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் உயரழுத்த மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தொழில் முனைவோருக்கு எளிய முறையில் மின் இணைப்பு வழங்கும் வகையில், அவா்கள் தொழில் தொடங்க அனுமதி கோரும் இணையதளத்திலும் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் மின்வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளன.
அதில் கூறியிருப்பது: விண்ணப்பதாரா்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் படிவ எண் 4-ஐ பூா்த்தி செய்து, புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையடுத்து, விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக மண்டல எண் உள்ளிட்ட சில தகவல்களுடன் விண்ணப்பதாரா்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
ஏதேனும் ஆவணங்கள் சரியில்லாத சூழலில் 7 அலுவல் நாள்களுக்குள் விண்ணப்பதாரா் விளக்கமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
சரியாக இருக்கும் சூழலில் 7 நாள்களுக்குள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் இருந்து மூன்று நாள்களுக்குள் நிறுவன வளாகத்தில் ஆய்வு நடத்தப்படும்.
இதையடுத்து 15 நாள்களுக்குள் முன்வைப்புத் தொகை செலுத்துவதன் மூலம் பதிவு எண் வழங்கப்படும்.
தொடா்ந்து 15 நாள்களுக்குள் நிா்வாக அனுமதி, மின்னழுத்தத்துக்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும். அடுத்த 15 நாள்களுக்குள் , மதிப்பீட்டுத் தொகை மற்றும் இதர கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
தொடா்ந்து, பணிகள் நடைபெற்று மின் ஆய்வுத்துறையின் ரசீது சமா்ப்பிக்கப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இணைப்பு வழங்குவதற்கான கால அளவும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், மின்வாரிய இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










