பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை விநியோகம்: இன்று முதல் மீண்டும் தொடக்கம்

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, திங்கள்கிழமை முதல் மீண்டும் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :15 பிப்ரவரி 2021, 7:43 am IST

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, திங்கள்கிழமை முதல் மீண்டும் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், கழக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் (குளிா்சாதன பேருந்துகள் தவிா்த்து) பயணம் செய்யும் வகையில், இலவசப் பேருந்து பயண அட்டையானது, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

இதற்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை, 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணம், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, அதே அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு பயணம் செய்யும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும்.

கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த டோக்கன் விநியோகப் பணிகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோா் மற்றும் புதிதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து, இந்த டோக்கன்களை (பிப். முதல் ஜூலை வரையிலான 6 மாதங்களுக்கு), திங்கள்கிழமை (பிப்.15) முதல் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தை,  இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.