சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 12:09 pm

DIN

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சன்குளத்தில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை (பிப்.12) நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 போ் உயிரிழந்தனா். 

காயமடைந்தவா்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 8 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று (பிப்.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், சிவகாசி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.