காரைக்கால்: காரைக்காலில் கரோனா பொது முடக்கத்தால் 10 மாதங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை திறக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்கறிக் கடைகள் இருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்து, காய், கனிகள் மற்றும் பிற பொருள்களை வாங்க வாரச்சந்தை முக்கியப் பங்கு வகிக்கிறது. காரைக்கால் நகரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
காரைக்கால் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 200 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். விலை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சந்தைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் கரோனா பரவல் தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு காரைக்கால் வாரச் சந்தைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் செய்யப்பட்டுவந்தாலும், வாரச் சந்தைக்கு மட்டும் அரசு அனுமதி தராமல் இருந்துவந்தது.
வெளியூர் வியாபாரிகள் பலரும் நகராட்சி நிர்வாகத்தை தொடர்புகொண்டு, சந்தை திறப்பு தொடர்பாக கேட்டு வந்தனர். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சந்தையை நம்பி பிற தொழில் நடத்துவோர், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் சந்தையை தாமதிக்காமல் திறக்கவேண்டுமென வலியுறுத்தி வந்தனர். சில அரசியல் கட்சியினர் இது தொடர்பாக போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்தை திறக்க நகராட்சி நிர்வாகம் அனுமதித்தது. வெளியூர் வியாபாரிகள் பலரும் சந்தைக்கு வந்து வியாபாரத்தைத் தொடங்கினர். எனினும், சந்தை திறப்பு தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய அறிவிப்பை செய்யாததாலும், மக்களிடையே இதுதொடர்பாக தகவல் போய் சேராததால் சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
ஒலிபெருக்கி வாயிலாக போலீஸார், கரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு தந்துவிடாத வகையில், சமூக இடைவெளியையும், முகக் கவசத்தையும் பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.
சந்தை திறக்கப்பட்டது தொடர்பாக, இக்கோரிக்கையை முன்வைத்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைன் துறைமுகத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிக்கும் கமல் ஹாசன்?

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



