புல்வாமா  தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு      ஸ்ரீவில்லிபுத்தூரில்  நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புல்வாமா  தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் புல்வாமா  தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்:  புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு      ஸ்ரீவில்லிபுத்தூரில்  நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் தீவிரவாதிகளால் தமிழக வீரர்கள்  சுப்பிரமணியன், சிவசந்திரன்  உட்பட 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஜவான்கள் நலச்சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கருத்தப்பாண்டி, ராதாகிருஷ்ணன் மெழுகுவர்த்தி வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

நினைவஞ்சலியை தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக வீரர்களின் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் விடுமுறையில் வந்த பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் கலந்துகொணடனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com