துறை வாரியாக ஆய்வு செய்யத் திட்டம்: புதுவை ஆளுநர் தமிழிசை

புதுவை துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
துறை வாரியாக ஆய்வு செய்யத் திட்டம்: புதுவை ஆளுநர் தமிழிசை
Published on
Updated on
1 min read

புதுவை துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், முதல் நாள் புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து வெள்ளிக்கிழமை முதலியார் பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த குழந்தைகளிடம் இனிப்பு வழங்கி பேசியவர், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது: 

புதுச்சேரியில் ஒவ்வொரு துறையாக நேரில் சென்று பார்வையிட்டு அதில் உள்ள குறைகளைச் சரிசெய்ய எனது அதிகாரத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு அங்கன்வாடி மையம் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவிநியோக திட்டத்தில் மக்களுக்கு அரிசி அல்லது தொகையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி மக்களுக்குத் தேவையானதைச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைகள் சார்ந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முக்கிய துறை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com