சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தினமணி.காம் செய்தி எதிரொலி: நடிகர் அஜித் பெயரை இழிவுபடுத்தியவர்கள் மீது புகார்

நடிகர் அஜித்தின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது ரசிகர் மன்றத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

News image
தினமணி.காம் செய்தி எதிரொலி: நடிகர் அஜித் பெயரை இழிவுபடுத்தியவர்கள் மீது புகார்
Updated On :23 பிப்ரவரி 2021, 4:27 am

DIN

நடிகர் அஜித்தின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது ரசிகர் மன்றத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. அந்த ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி  விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. 

அந்த விளம்பர பதாகையில் அஜித் படமும் சுற்றிலும் மதுபாட்டில்கள் படமும் இருந்தது. அதில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருந்தது. இது அஜித் ரசிகர்கள் மனதை புண்படுத்துவதாகக் கூறி விளம்பர பதாகையில் உள்ள ஆறு பேர் மீது வையம்பட்டி காவல்நிலையத்தில் ரசிகர் மன்ற செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் வையம்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.