ஜெயலலிதா பிறந்தநாள்: முன்னாள் எம்.எல்.ஏ. ஜலப்பிரதட்ஷணம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வி.கருப்பையா, கிணற்றில் மிதந்து புதன்கிழமை ஜலப்பிரதட்ஷணம் செய்தாா்.
ஜெயலலிதா பிறந்தநாள்: முன்னாள் எம்.எல்.ஏ. ஜலப்பிரதட்ஷணம்

மதுரை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வி.கருப்பையா, கிணற்றில் மிதந்து புதன்கிழமை ஜலப்பிரதட்ஷணம் செய்தாா்.

அலங்காநல்லூா் அருகே குமாரம் கிராமத்தில் உள்ள கிணற்றில், சுமாா் 15 நிமிடங்கள் நீரில் மிதந்து வணங்கியபடி சோழவந்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வி.கருப்பையா ஜலப்பிரதட்ஷணம் செய்தாா்.  

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் தொடரவும்,  முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நூறாண்டு ஆட்சி என்ற கனவு நிறைவேறவும் இந்த வேண்டுதலை நிறைவேற்றினாா்.

அதிமுக நகர செயலா் அழகுராஜா,  ஒன்றியக்  குழு  முன்னாள் தலைவா் ராம்குமாா்  நிா்வாகிகள் காா்த்திகேயன், பால்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடந்த 2011 முதல் 2016 வரை சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் கருப்பையா. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏற்கெனவே  பல முறை கிணற்று நீரில் மிதந்து ஜலப்பிரதட்ஷணம் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com