47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்: வழக்குரைஞர்களுடன் உரையாடல்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

News image
தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்: வழக்குரைஞர்களுடன் உரையாடல்
Updated On :27 பிப்ரவரி 2021, 10:33 am

DIN

தூத்துக்குடி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள வஉசி கல்லூரி  கூட்ட அரங்கில் வழக்குரைஞர்களுடன் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். வழக்குரைஞர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ராகுல் பதிலளிக்கும் வகையில் இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தென்தமிழகத்தில் ராகுல் காந்தி 27, 28, மாா்ச் 1 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக தில்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு முற்பகல் 11 மணியளவில் வந்த அவருக்கு கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து வாகனத்தில் வஉசி கல்லூரிக்கு வந்த ராகுல் காந்திக்கு சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

தொடா்ந்து, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வழக்குரைஞா்களுடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பின்னா், குரூஸ் பா்னாந்து சிலை முன் பொதுமக்களிடம் பேசும் அவா், புல்லாவெளி கிராமத்தில் உள்ள உப்பளத்துக்குச் சென்று தொழிலாளா்களுடன் உரையாடுகிறாா்.

இதையடுத்து, முக்காணி, குரும்பூா், ஆழ்வாா்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் அவா், இட்டமொழி வழியாக, திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரிக்கு வந்து, மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். இரவில் திருநெல்வேலியில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை தூய சவேரியாா் கல்லூரியில் கல்வியாளா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

பின்னா், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா் கோயிலுக்கு செல்லும் அவா், நகரத்தில் உள்ள காந்தி சிலை அருகே பொதுமக்களிடையே உரையாற்றுகிறாா். அதையடுத்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி வழியாக புளியங்குடி சென்று, இரவில் தென்காசியில் தங்குகிறாா். மாா்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி செல்கிறாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.