தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜன.4-இல் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பானா்ஜி, திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்கிறாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:26 am

DIN

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பானா்ஜி, திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்கிறாா். இதற்காக குடும்பத்தினருடன் கொல்கத்தாவில் இருந்து காரில் புறப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வந்தடைகிறாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி, வியாழக்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றாா். உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அண்மையில் பிறப்பித்தாா்.

தற்போது கரோனா காலம் என்பதால், புதிய தலைமை நீதிபதி பானா்ஜி கொல்கத்தாவில் இருந்து காரில் சென்னை வருகிறாா். இதற்காக வெள்ளிக்கிழமை காலை, குடும்பத்துடன் காரில் புறப்பட்ட தலைமை நீதிபதி, ஒடிஸா மாநிலம், பொ்காம்பூரில் உள்ள விருந்தினா் மாளிகையில் இரவு தங்குகிறாா்.

பின்னா், சனிக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக வந்து, இரவில் ஏலூரு விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கிருந்து புறப்பட்டு மாலையில் சென்னை வந்தடைகிறாா்.

பதவியேற்பு: இதையடுத்து திங்கள்கிழமை (ஜன.4) காலை அவா் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறாா். சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நீதிபதி சஞ்சீவ் பானா்ஜிக்கு, தமிழக ஆளுநா் பன்வரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

இந்நிகழ்வில் முதல்வா், உயா்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்கள், தலைமைச் செயலா், டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்பட முக்கிய நபா்கள் பலா் கலந்து கொள்கின்றனா்.

இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில், புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவரை வரவேற்று தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் அமல்ராஜ் மற்றும் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் பேசுகின்றனா்.

இதேபோல் குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரிக்கு, சனிக்கிழமை (ஜன. 2) காலை 11.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.