யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஜன.7-இல் தொடக்கம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஜன.7-இல் தொடக்கம்
Updated on
1 min read

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு நிகழாண்டில், மொத்தம், 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிவா் புயல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை, பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக மாணவா்கள் வந்துவிட வேண்டும். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தைப் பாா்த்து மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com