காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குரூப்-1 தேர்வு: திருவள்ளூரில் 13 மையங்களில் 5132 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த திருவள்ளூர் அருகே அரண்வாயல் தனியார் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் பா.பொன்னையா நேரில்

News image
திருவள்ளூர் அருகே அரண்வாயல் பிரதியுஷா பொறியியல் கல்லூரி குருப்-1 தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பா.பொன்னையா, உடன் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர்.
Updated On :3 ஜனவரி 2021, 7:50 am

DIN



திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த திருவள்ளூர் அருகே அரண்வாயல் தனியார் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப்-1 இல் அடங்கிய துணை ஆட்சியர், துணைக்காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையாளர், கூட்டுறவு துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், தீயணைப்பு மற்றும் பேரிடர் துறைகளைச் சேர்ந்த பணிகளுக்கான தேர்வு மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இத்தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 5132 பேர் பங்கேற்று தேர்வு எழுதுவதற்காக காலையில் முன்னதாகவே வந்து சேர்ந்தனர். அப்போது, கரோனா நோய்த்தொற்று தடுக்கும் வகையில் முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக தேர்வு மையத்தின் முன்புறத்தில் ஸ்கேன் செய்து கிருமி நாசினியும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், திருவள்ளூர் அருகே உள்ள அரண்வாயலில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரி மையத்தில் ஆட்சியர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 இந்த மாவட்டத்தில் தேர்வு எழுத வந்தவர் அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், தேர்வர்களின் வசதிக்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது, உடன் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.