மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தமபாளையத்தில் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

News image
உத்தமபாளையம் நேரடிக்கொள்முதல் நிலையத்தில் நிரந்த வெளியில்  வைக்கப்பட்ட மழையில் நனைந்த நெல் மூட்டைகள்.
Updated On :3 ஜனவரி 2021, 7:27 am

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதியில் நெற்பயிர் விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தியாகும் நெல்லுக்கு விலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடிக் கொள்முதல் நிலையம் அமைத்துள்ளது.

அதன்படி, உத்தமபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடிக் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.

தற்போது, உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதியில் முதல் போக அறுவடைப்பணிகள் நடைபெறுகிறது. இதனைஅடுத்து ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் போதுமான இடவசதியின்றி கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியில்லாத காரணத்தால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. தவிர, திறந்த வெளி என்பதால் நெல் மூடைகளை எலிகளால் சேதமாகிவருகிறது.

எனவே, உத்தமபாளையம் பகுதியில் ஆண்டு தோரும் நெல் விவசாயம் நடைபெறுவதால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் மூடைகளை பாதுகாப்பாக வைக்க நிரந்தரமான இடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.