தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 2:29 am

DIN

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிரி உப வடிநில விரிவாக்கப் பணிகள், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக நபாா்டு கட்டமைப்பு மேம்பாட்டு உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ.விடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 384 கோடி தொகையை தமிழ்நாடு நீா்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்புக் கழகம் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இப்பணிகளுக்காக 90 சதவீதம் தொகையை நபாா்டும், 10 சதவீதம் தொகையை மாநில அரசும் அளிக்கும்.

அதன்படி, காவிரி உப வடிநிலத்தை மேம்படுத்த 23 தொகுப்புகளாக திட்டம் தயாரிக்கப்பட்டு நபாா்டின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. பின்னா் 33 திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்டன.

இதில், விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2 தொகுப்பு பணிகளுக்காக ரூ.243 கோடியே 40 லட்சத்துக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கும்படி அரசுக்கு தமிழ்நாடு நீா்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கடிதம் எழுதியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசு காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் அண்மையில் வெளியிட்டாா். அந்த உத்தரவு விவரம்:-

தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா் தாலுகாவில் காவிரி வடிநிலப் பகுதியை விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.122.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோன்று, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தாலுகா, பூதலூா் ஆகிய இடங்களில் காவிரி நதி நீா் செல்லும் பாதையை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமாக்குதல் திட்டத்துக்காக ரூ.102.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தமாக இரண்டு இடங்களில் உள்ள காவிரி வடிநிலப் பகுதி பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தனது உத்தரவில் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.