ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூத்தாநல்லூர் இலவச சிறப்பு மருத்துவ முகாமில் 953 பேருக்கு பரிசோதனை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் புள்ளமங்கலம் ஊராட்சியில், நடைபெற்ற சிறப்பு மருத்துவ  முகாமில், 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்கள் மூலம் 953 பேர் பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  

News image
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன்.
Updated On :7 ஜனவரி 2021, 10:33 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் புள்ளமங்கலம் ஊராட்சியில், நடைபெற்ற சிறப்பு மருத்துவ  முகாமில், 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்கள் மூலம் 953 பேர் பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  

புள்ளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டின் தொடக்க விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு மருத்துவ முகாமை, மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார். முகாமில்,கண், பல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்து சோதனை, இருதய நோய் மற்றும் வயது முதிர்வில் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

உள்ளிக்கோட்டை வட்டார அரசு மருத்துவ அலுவலர் மருத்துவர் அபூவ தமிழன் தலைமையில், மருத்துவர்கள் தமிழ் வேல், விக்னேஷ், சர்மிளா, மஞ்சுளா தேவி உள்ளிட்ட 16 மருத்துவர்கள் மற்றும் 24 செவிலியர்களுடன், 953 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில், கண் அறுவை சிகிச்சைக்காக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவருக்கு வாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 17  கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்து பார்க்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, உள்ளிக்கோட்டை சுகாதார ஆய்வாளர் சி. செல்வவிநாயகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொ) ஆர்.வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் கவனித்தனர்.ஒன்றியக் குழு உறுப்பினர் பரம வினாதா சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.