புள்ளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டின் தொடக்க விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு மருத்துவ முகாமை, மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார். முகாமில்,கண், பல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்து சோதனை, இருதய நோய் மற்றும் வயது முதிர்வில் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.