டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திண்டிவனம் அருகே ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

News image
திண்டிவனம் அருகே ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
Updated On :7 ஜனவரி 2021, 12:14 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

மீண்டும் கடந்த இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள ரோசனை ஏரியில் மழைநீர் தேங்கி வழிந்ததால்  கரையில்  வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, ரோசனை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

Story image

இதில், சாலைகளில் மழை வெள்ள நீர் வழிந்தோடியதோடு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழை நின்றதால் தண்ணீர் வடிந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் சென்று பார்வையிட்டு, ஏரி உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.