

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யும் டிஎஸ்பி ராஜாவை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வருபவர் ராஜன் (45). உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் இவரது தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்குரைஞர்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி காவல்நிலையத்தில் டிஎஸ்பி ராஜன் தூண்டுதலின் பேரில் இரண்டு வழக்குரைஞர்களின் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் வீரபிரபாகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியான வந்து உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், தமிழக அரசு டிஎஸ்பி ராஜனை உடனடியாக பணியிடை மாற்றக் கோரியும் கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.