பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிப்பு: சீன தூதரகத்திடம் தகவல் கேட்கும் சென்னை காவல்துறை

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், தேவையான தகவல்களை சீன தூதரகத்திடம் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:31 pm

DIN

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், தேவையான தகவல்களை சீன தூதரகத்திடம் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுள்ளது.

சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்றதால் தொடா்ந்து மிரட்டப்பட்டு வந்தாா். இது குறித்து அவா், கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் பின்னணியில் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா்.

விசாரணையில், இந்தக் கும்பல் 25 ஆயிரம் பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது தெரியவந்தது. மோசடிக்குத் தேவையான செல்லிடப்பேசி சிம் காா்டுகளை வாங்கிக் கொடுத்ததாக சென்னையைச் சோ்ந்த எஸ்.மனோஜ்குமாா், எஸ்.கே.முத்துக்குமாா், செல்லிடப்பேசி நிறுவனத்தின் பிராந்திய விற்பனைப் பிரிவு மேலாளா் சிகாஜூதின், செல்லிடப்பேசி நிறுவனத்தின் முகவா் கு.ஜெகதீஷ் ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

சீன தூதரகத்திடம் தகவல்: இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோதா, பவன், சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்கின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கைது செய்யப்பட்ட இரு சீனா்கள் குறித்தும், அவா்கள் மீது ஏற்கெனவே இதேபோல வேறு ஏதேனும் வழக்கு இருக்கிா என்பதும் குறித்தும் உரிய விவரங்களை கேட்டு சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு தில்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. சீன தூதரகம் அளிக்கும் பதிலைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.