பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் பழனிசாமி

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

News image
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :10 ஜனவரி 2021, 7:30 pm

DIN

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையாா்குளம் வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டம் கீழப்பூவாணி கிராமத்தின் லட்சுமண பெருமாள், திருவாரூா் மாவட்டம் கோயில்திருமாளம் கிராமத்தின் இளையராஜா, இளவரசன், பாரி, நாகப்பட்டினம் சேமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சீத்தாராமன், கடலூா் மாவட்டம் கடவாச்சேரி கிராமத்தின் சாமித்துரை, குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கணேசன், திருவள்ளூா் மாவட்டம் கீரின்வேல் நத்தம் கிராமத்தின் துரைசாமி, பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மீனா, தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கமல்ராஜ் ஆகியோா் வெவ்வேறு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் மஹாவீா் நகரைச் சோ்ந்த வாசுதேவன், காஞ்சிபுரம் மாவட்டம் காவணிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன், குன்றத்தூா் மலைப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ், உத்தரமேரூா் வட்டம் இளநகா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கன்னியப்பன், காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, விருதுநகா் மவாட்டம் வத்திராயிருப்புப் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம், கிருஷ்ணகிரி பெண்ணேஸ்வரமடம் கிராமத்தின் சென்றாயன், திருவண்ணாமலை காட்டுக்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் ஆகியோரும் வெவ்வேறு நிகழ்வுகளில் சிக்கி பலியாகினா். அவா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.