மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை அடியிலிருந்து 105 அடியாக உயர்ந்துள்ளது. 
மேட்டூர் அணை
மேட்டூர் அணை



மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை அடியிலிருந்து 105 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,137 கன அடியிலிருந்து 2381கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 71.47 டி.எம்.சியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com