தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த மழை: பெருக்கெடுத்த வெள்ளம்; சம்பா நெல் வயல்கள் பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

News image
பஞ்சந்திக்குளம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராகும் சம்பா நெல் சாகுபடி வயல்களில் பெருக்கெடுத்து கதிர்களை சாய செய்துள்ள வெள்ள நீர் .
Updated On :12 ஜனவரி 2021, 6:55 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அறுவடைக்குத் தயாராகி வந்த சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால் கதிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆதனூர் பகுதியில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ள நீரின் இடையே செல்லும் பேருந்து, வாகனங்கள்.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆதனூர் பகுதியில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ள நீரின் இடையே செல்லும் பேருந்து, வாகனங்கள்.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழைப் பொழிவு ஏற்பட்டு, திங்கள்கிழமை பகல், இரவு முழுவதும் விடாமல் கொட்டித் தீர்த்தது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 178.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 142.6 மி.மீட்டரும் மழை பதிவானது.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆதனூர் பகுதியில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ள நீரின் இடையே செல்லும் பேருந்து, வாகனங்கள்.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆதனூர் பகுதியில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ள நீரின் இடையே செல்லும் பேருந்து, வாகனங்கள்.

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வயல்களில் தண்ணீர் வடியாது இருந்த நிலையில் தற்போது கொட்டித் தீர்த்து வரும் மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, அறுவடைக்குத் தயாரக உள்ள நெல் வயல்களை வெள்ள நீர் சூழ்ந்து, கதிர்களை பாதிக்கச்செய்துள்ளது.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆதனூர் பகுதியில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ள நீரின் இடையே செல்லும் பேருந்து, வாகனங்கள்.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஆதனூர் பகுதியில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் வெள்ள நீரின் இடையே செல்லும் பேருந்து, வாகனங்கள்.

நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பல இடங்களில் பெருக்கெடுத்த மழை வெள்ளம் சாலைகளில் வழிந்தும், உடைப்புகளை ஏற்படுத்தியும் ஓடுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மழை குறைந்து காணப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.