பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு செய்தார். 

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:19 pm

DIN

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு செய்தார். 

சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். 

இங்கு மலைமீது உள்ள கோயிலில் தோணியப்பர் உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆலய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தலமாக இக்கோயில் விளங்குகிறது பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தர்மபுரம் ஆதினம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர் மாத வழிபாடு நிகழ்ச்சிக்காக இக்கோயிலுக்கு வருகை புரிந்தார். 

முன்னதாக ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார் தர்மபுர ஆதினம். தொடர்ந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்பாள் தோணியப்பர் சட்டைநாதர் திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமி சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்தார். கோயில் சிவாச்சாரியார்கள் தருமபுரம் ஆதினத்திற்கு பிரசாதங்களை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.