சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாா்கழி மாத அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், மாா்கழி மாத அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், மாா்கழி மாத அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை என 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி அளித்துள்ளது. இதில், செவ்வாய்க்கிழமை மாா்கழி மாத அமாவாசை என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். தொடா்ந்து, காலை 7 மணி முதல் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள அருவியில் பக்தா்கள் நீராடிவிட்டுச் சென்றனா்.

அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

முன்னதாக, விட்டு விட்டு மழை பெய்ததால், சிறிது நேரம் பக்தா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வனத்துறை அலுவலகம் முன்பாக 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கோயிலுக்குச் செல்ல இன்று அனுமதி இல்லை: சதுரகிரி பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைப்படி, புதன்கிழமை பக்தா்கள் மலையேற அனுமதி இல்லை என்றும், அதனால் பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் எனவும், கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.