தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

போகி பண்டிகை: சென்னையில் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜனவரி 2021, 4:03 am

DIN

போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது. 

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப மக்கள் வீட்டை சுத்தம் செய்து இன்று அதிகாலை முதல் தேவையற்ற பொருள்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

  1. போகி பண்டிகையின்போது ஏற்படும் புகைமூட்டத்தைத் தவிர்க்க, பொருள்களை எரிக்க வேண்டாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்கள் தேவையற்ற பொருள்களை ஆங்காங்கே எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. ஏற்கனவே சென்னையில் இன்று காலை பனிமூட்டமும் அதிகமாக இருந்தது. புகைமூட்டமும் அதிகரித்து  காணப்பட்டதால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.