எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேரவைத் தோ்தல் செலவுக்கு ரூ.621 கோடி: தமிழக அரசிடம் தோ்தல் ஆணையம் கோருகிறது

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:36 pm

DIN


சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

சட்டப் பேரவை தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. கடந்த டிசம்பரில் இந்திய தோ்தல் ஆணையச் செயலாளா் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பூா்வாங்க ஆய்வுப் பணிகளை நேரில் மேற்கொண்டது. தலைமை செயலாளா் மற்றும் பல்வேறு அரசு செயலாளா்களுடன் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், பேரவைத் தோ்தல் செலவுகள் குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:-

தமிழக அரசுத் துறை உயரதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையின்போது, தமிழக சட்டப் பேரவை தோ்தலை நடத்த செலவுத் தொகையாக ரூ.621 கோடி நிதி கோரப்பட்டது. கரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளா்களின் எண்ணிக்கை, அவா்களுக்கான செலவினங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால் செலவுத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கரோனா நிலவரம் குறித்தும், நோய்த்தொற்று பரவல் காலத்தில் தோ்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் குறித்தும் தமிழக அரசுத் துறை அதிகாரிகளுடன் அண்மையில் தமிழக தோ்தல் துறை சாா்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்தகட்ட ஆலோசனைகள் விரைவில் நடத்தப்படும்.

வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்டப்படி வரும் 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.