/

விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்: ராதாகிருஷ்ணன்

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

Updated On :17 ஜனவரி 2021, 10:37 am

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜன. 17) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி இரண்டும் பாதுகாப்பானவை என்று கூறினார்.

கரோனா தாக்கத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. மக்களிடையே தடுப்பூசி தொடர்பாக உள்ள அச்சத்தை நீக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

கரோனா தடுப்பூசிக்காக 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.