மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாஞ்சோலை அரசுப்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம்: மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. 

News image
மாஞ்சோலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே காணப்படும் காட்டு யானைகள்
Updated On :19 ஜனவரி 2021, 4:37 am

DIN


அம்பாசமுத்திரம் : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. 

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய நான்கு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக மாஞ்சோலையில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இங்கு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கரானா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த 17ஆம் தேதி முதல் மாஞ்சோலை உயர்நிலைப்பள்ளி பகுதியில் சில காட்டு யானைகள் நடமாடி வருவதால், பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்திற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து யானைகள் அதே இடத்தில் முகாமிட்டு உள்ளதால் மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பிற ஊர்களில் இருந்து இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாஞ்சோலை செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் ஆசிரியர்களும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

பத்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினர்  மாஞ்சோலை அரசுப் பள்ளி அருகில் நடமாடிவரும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையும் வனத்துறை அனுமதி மறுப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.