நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூ. சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒப்பாரி வைத்து சாலை மறியல் செய்தனர். 

News image

ஒப்பாரி வைத்து சாலை மறியல் செய்த பெண்கள்

Updated On :20 ஜனவரி 2021, 8:04 am


கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒப்பாரி வைத்து சாலை மறியல் செய்தனர். 

லெட்சுமாங்குடி பாலம் அருகே, நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.முருகேசு தலைமையில் நடத்தப்பட்ட சாலை மறியலில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரியும், வேலையிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 2020-க்கான பச்சை பயிருக்கு உரிய பயிர்க் காப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

Story image

தொடர்ந்து நடைபெற்ற சாலை மறியலில், தமிழ்நாடு விவசாயம் என்ற பதாகையைச் சுற்றி, பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரியில் ஈடுபட்டனர். திடீர் ஒப்பாரியால் சலசலப்பு ஏற்பட்டது. 

மறியலில், விவசாய சங்க நகரச் செயலாளர் கே.நாகராஜ், விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ்,மாதர் சங்க நகரச் செயலாளர் ஆர்.மகேஸ்வரி, நகர செயற்குழு உறுப்பினர்கள் வி.ராஜேந்திரன், கே.பேபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சாலை மறியலால், திருவாரூர் - மன்னார்குடி சாலை, வடபாதிமங்கலம் - கொரடாச்சேரி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.