தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவுக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2 நாள்களாக காய்ச்சல் பாதிப்பில் இருந்த ஆட்சியருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.