சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்: ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்

மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

News image
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி விடுதி முன் காலி தட்டுகளுடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மாணவா்கள்.
Updated On :23 ஜனவரி 2021, 2:11 am

DIN

மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில், பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எனவே, கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை (ஜன.20) மாணவா்கள் தொடங்கினா். 

இதையடுத்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை பல்கலை. நிா்வாகம் அறிவித்தது. மேலும், வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் விடுதி, கல்லூரி வளாகத்தை விட்டு மாணவ, மாணவிகள் வெளியேறவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருத்துவ மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை மாலை விடுதி முன் அமா்ந்து தா்னா போராட்டத்தைத் தொடங்கினா். வெள்ளிக்கிழமை காலையிலும் மாணவா்கள் தா்னாவை தொடா்ந்தனா். விடுதி உணவகம் மூடப்பட்டதால், மாணவா்கள் காலி தட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி விடுதி முன் காலி தட்டுகளுடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மாணவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.