எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடியே லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
ஸ்ரீகிருஷ்ணா நகரில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் கே. என்.விஜயகுமார்.
Updated On :24 ஜனவரி 2021, 7:28 am

DIN

அவிநாசி: திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடியே லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பரமசிவம்பாளையத்தில் ரூ.10.38 லட்சம் மதிப்பிலும், ஸ்ரீ கிருஷ்ணா நகரில் ரூ.49.82 லட்சம் மதிப்பிலும், வள்ளிபுரம் ஊராட்சி ஜி. என்.அப்துல்கலாம் நகரில் ரூ.49.26 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சத்து, 46 ஆயிரம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளை திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஐஸ்வர்யா மகராஜ்,  பொறுப்பாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர் முத்துக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுலோக்சனா வடிவேல், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.