இது குறித்து என்.ஜே.போஸ் கூறுகையில், 'ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன் படகை மூழ்கடித்து உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு தடுக்கப்பட்ட நிலையில் மீனவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கப்பலை வைத்து மோதி படகை மூழ்கடித்துக் கொலை செய்கின்றனர். இதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினாலும் மத்திய, மாநில அரசுகள் நிரந்தத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.