தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு

ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருடு போனது.

News image

ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு

Updated On :24 ஜனவரி 2021, 11:48 am

DIN

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி போந்தவாக்கம் கண்டிகையில் புதியதாக கட்டப்பட்ட பவானி அம்மன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது இந்த கோயிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த கோயிலைத் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தாலி, உண்டியல் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆரணி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.