47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்' - தமிழிசை சௌந்தரராஜன்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :24 ஜனவரி 2021, 8:34 am

DIN

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் பேசியதாவது:

இன்று பெண் குழந்தைகள் தினம். பெண் குழந்தைகளை வெறுக்க வேண்டாம், அவர்களை விரும்ப கற்றுக்கொள்வோம், படிக்க வைப்போம், அவர்களின் மனநலம் பாதுகாத்து மனிதநேயம் காப்போம், அவர்களின் உடல்நலம் காத்து  உலக நலம் காப்போம், ஆராதிக்கக் கற்றுக்கொள்வோம், பெண் குழந்தைகளின் வளச்சியில் தளர்ச்சியில்லாமல் உதவுவோம், மகிழ்ச்சியுடன் பெண்களை, பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.