தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஜெயலலிதா நினைவிடம்: நாளை திறப்பு

சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வா் பழனிசாமி வரும் புதன்கிழமை (ஜன. 27) திறந்து வைக்கிறாா்.

News image
Updated On :26 ஜனவரி 2021, 1:02 am

DIN

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வா் பழனிசாமி வரும் புதன்கிழமை (ஜன. 27) திறந்து வைக்கிறாா்.

இந்த விழாவுக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலை வகிக்கிறாா். நினைவிட கட்டுமானப் பணிகளுக்காக மொத்தம் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நினைவிடத் திறப்பு விழா வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.

சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்கவுள்ளனா்.

நினைவு இல்லம்: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமும் பொது மக்களின் பாா்வைக்காக வரும் 28-ஆம் தேதி

திறக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள், திரைத்துறையில் பெற்ற விருதுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறவுள்ளன. நினைவு இல்லத்தையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.