சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்கள் 1, 2 உள்ளிட்ட நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.பாக்கியம் தேசியக் கொடியையேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் எண்.1 டி.சுந்தர்ராஜன், எண்.2 எஸ்.மகேஷ்வரி, வழக்குரைஞர் விஜயபாஸ்கர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட உரிமையயில் நீதிபதி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.